புதிய மதுரையை புதுப்பொலிவுடன் நாயக்கர் மன்னர்கள் அமைத்தனர் . மதுரை மீனாட்சி கோவிலில் பூஜைகள் சரியாக நடக்கப்பட்டன . சோழர்களுக்கும் , பாண்டிய சிற்றரசுகளுக்கும் சண்டை வந்ததால் , பாண்டிய மன்னர் சோழனை அடக்க விஜயநகரில் உதவி நாடினார் .கிருஷ்ண தேவ ராயரும் தனது தளபதியான நாகம நாயக்கரை மதுரைக்கு அனுப்பினார் . நாகமர் வீர சோழனை விரட்டி அடித்து தன்னையே அரசனாக முடி சூடி கொண்டார் . இதனை அறிந்து ராயர் கோபப்பட்டு நாகமரை சிறையில் இடுங்கள் என்று உத்தரவிட்டார் ஆனால் எந்த தளபதிகளும் அதற்கு முன்வரவில்லை , நாகம நாயக்கர் அனைவருக்கும் உறவினர் மேலும் அவருடன் போர் புரிவதை எந்த தளபதிகளும் விரும்பாமல் இருந்தனர் . நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் தான் மதுரைக்கு சென்று தந்தையை வென்று வருகிறேன் என்று கூறினார் .
பெரும்படையை கொண்டு மதுரைக்கு சென்றார் இந்த படையில் கம்பளத்தார்களும் , பலிஜர்களும் , சக்கிளியர்களும் மட்டுமே இருந்தனர் , ஏற்கனவே நாகம நாயக்கர் படையிளிலும் மேல்கூறிய சமுக மக்களே இருந்தனர் , திருச்சியில் இருபடைகளும் தாவாரம் போட்டுள்ளனர் , இரு வீரர்களுக்கும் சண்டைபோடுவதில் எள்ளளவும் விருப்பம் இல்லை காரணம் இருபடைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊர்க்கார்கள், உறவுக்காரர்கள் , சீமைக்காரர்கள் என்பதால் போர் எதுவும் இல்லாமலேயே நாகம நாயக்கர் விசுவனாதனாயக்கரிடம் அடிபணிந்தார் .
ராயர் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று விசுவனாதரிடம் கேட்டார் . அவரோ எனது தந்தையை விடுதலை செய்தாலே போதும் என்றுக்கேட்டுக்கொண்டார் . அதன்படியே ராயரும் செய்து இனி மதுரைக்கு விசுவநாத நாயக்கரே அரசர் என்பதை பிரகடனம் செய்தார் .
வேகிளியார் குலத்தில் தற்போது நாற்பதாயிரம் வீரர்கள் தான் உள்ளனர் . மீதிப்பேர் போர்க்களத்தில் பலியாகி கொண்டே இருக்கின்றனர் . தேவகிரிக்காக இருநூறு வருடம் , கம்பிளி யுத்தத்தில் ஐம்பதாயிரம் பேர் இறந்தார்கள் , கம்பள பெண்களை காப்பாற்றுவதற்காக துலுக்கர்களிடம் சண்டையில் பல ஆயிரம் பேர் என்று இறந்துக்கொண்டே இருகின்றனர் என்று விசுவநாத நாயக்கர் தனது நிலையை கண்டு புலம்பினார் .
வேடர்கள் ஆயர்களாகி , ஆயர்கள் அரசர்களாக , அரசர்கள் வீரர்களாகி என்று இவர்களின் பரிணாமம் விதவித மாக இருந்தன . முரட்டு முகமதியர்களிடம் சண்டை , தேவகிரியை இழந்த கொல்லவார் மக்களுக்கு கம்பள தேசமே தஞ்சம் தந்தது , வேகிளியாரின் கம்பிளி தேசம் கொல்லவார்களுக்கும், தொக்கலவார்களுக்கும் அடைக்கலம் தந்து காப்பாற்றியது . சந்திரகிரி சில்லவார்களும் வேகிளியார்களும் ஒன்று சேர்ந்து விஜயநகரத்தை கட்டி எழுப்பினர் . கொல்லவார் பெண்ணை துலுக்கர் முதலில் தேவகிரியில் கேட்டதே இத்துணை சண்டைகளுக்கும் காரணமாக இருந்தன .
கம்பளத்து மரபில் வருபவர்களுக்கு திருமண பந்தம் கம்பளத்தில் செய்யகூடாது என்ற முறை அந்த காலத்தில் இருந்தன , பெண் எடுப்பதை பெரும்பாலும் பலிஜர் குலத்தில் தான் எடுப்பது வழக்கம் , இப்படி பெண் எடுக்கும் நிலையில் பெண் சீராக பல ஊர்களை பலிஜர்களுக்கு தரப்பட்டது இதனை தடுக்க விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கம்பளத்தார்கள் இனி பலிஜர் குலத்தில் பெண் எடுக்காமல் கம்பளதிலேயே திருமணம் செய்வதை கட்டாயப்படுத்தினார் . இருந்தாலும் மதுரையின் கடைசி அரசி மீனாட்சி வரை பலிஜா பெண்ணாகவே இருந்தனர் .
கிருஷ்ணதேவராயரின் தாத்தாவின் பெயர் சாளுவ குண்டப்பா நாயக்கர் , சந்திரகிரியின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்ட காலம் அது , முதுகல் கோட்டை துலுக்கர்களிடம் பறிபோனதால் தொட்டியம் வீரபத்திர நாயக்கர் வேகிளியார் சில்லவார் கூட்டத்தோடு சந்திரகிரிக்கு வந்தார் . முதுகலில் இருந்து வந்த இந்த கூட்டதோர் தங்களை அனைத்திலும் வேறுபடுத்தி காட்டிக்கொண்டனர் , மற்ற வேகிளியார் கூட்டங்கள் பெனுகொண்டா , விஜயநகருக்கு போய்விட்டன .

No comments:
Post a Comment